தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்வை நடத்துவதை பொறுத்தவரை இன்னும் ஏழு மாதங்கள் தான் உள்ளன அதற்குள் தற்போது உள்ள முழுமையான பாடத் திட்டத்திற்கு மாணவர்கள் தயாராகி விடுவார்களா என்பதை பார்க்க வேண்டியுள்ளது எனவும் தற்போது உள்ள பாடத்தில் 60 சதவீதத்தை குறைத்து பொதுத் தேர்வை நடத்தலாமா என்றும் விவாதித்து வருகிறோம். சி.எஸ்.ஆர் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் எனக் கூறினார். எல்கேஜி,யுகேஜி படிக்காமல் குறிப்பிட்ட வயதை அடைந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகள் மறுக்கக் கூடாது அப்படி மறுப்பதற்கு எந்த விதியும் இல்லை எனக்கூறினார். கல்வி மேலாண்மை தகவல் மையம் எனப்படும் சாப்ட்வேர் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களின் விவரங்கள் ,பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பள்ளிக் கல்வித் துறையில் தற்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது எனக் கூறினார்.கொரோனா காரணமாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வரை 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.தனியார் பள்ளிகளில் இருந்து மட்டும் 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என கூறினார் .ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான செல்போன், இன்டர்நெட் வசதி போன்றவை குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.