இறால் புளிக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி ,பூண்டு விழுது
- 200 கிராம் இறால்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் மல்லித் தூள்
- கொத்தமல்லி தலை -சிறிது அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
- புளி – எலுமிச்சை பழம் அளவு
- கருவேப்பில்லை – சிறிதளவு
இறால் புளிக்குழம்பு செய்முறை :
புளி – எலுமிச்சை பழம் அளவு – நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்.
வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு வதக்கவும்.
வதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு முடவும்.
பின்பு அடுப்பை மிதமான சூட்டில் ( sim )வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும்.இறால் புளி குழம்பு ரெடி.
