அனைத்து மத வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஊதுபத்திகளாகும். இவை இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதிக கிராக்கியுள்ள பொருளாகும். வீடுகள் மற்றும் கோயில்களில் தெய்வீக நறுமணத்தை பரப்புவதில் முக்கியப் பங்காற்றும் இந்த ஊதுபத்திகள், தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் தியான வகுப்புகளில் மனதை ஓர்நிலைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மிக எளிய முறையில் வீட்டிலேயே குடிசைத் தொழில் போல இந்த ஊதுபத்தி தயாரிப்புத் தொழிலை மேற்கொள்ளலாம். இதற்குத் தேவையான அடிப்படை மூலப் பொருள்களாக மூங்கில் குச்சிகள், நறுமணத்துக்காக சில பொடிகள் மற்றும் சந்தன, மல்லிகை, ரோஜா போன்ற வாசனை திரவிய எண்ணெய்கள். இவை போதும் நறுமணம் மிகு ஊதுபத்திகளைத் தயாரிக்க. மொத்தமாக தயாரித்து விற்பனை செய்ய விரும்பினால் இதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் ஊதிபத்தி தயாரிப்பு இயந்திரங்கள் ரூ.50 ஆயிரம் முதல் சந்தைகளில் கிடைக்கின்றன.
