வீட்டில் இருந்தே எளிய முறையில் மெழுகுவர்த்தி தயாரிப்புத் தொழிலைத் தொடங்கலாம். பண்டிகைக் காலங்களில் மெழுகுவர்த்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்படும். இவைதவிர வீடுகள், ஹோட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்கள் போன்றவற்றில் அலங்காரப் பொருளாகவும் கலர்கலரான மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இது எப்போது டிமாண்ட் உள்ள தொழில்.

குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் 30 வரை முதலீடு செய்தாலே போதும். இதற்கென சில அத்தியாவசியமான மூலப் பொருள்களான மெழுகு, மெழுகுவார்ப்பு அச்சு, நூல், அரோமா எண்ணெய் போன்றவையும், மெழுகை உருக்கும் ஓவன், மெழுகை உருக்க பயன்படும் கலன், தெர்மாமீட்டர், எடை இயந்திரம், சுத்தியல் போன்ற சில எளிய கருவிகளும் இருந்தால் போதும் இத்தொழிலில் தடம் பதிக்க.