கோலாபுரி மட்டன் கறி செய்ய தேவையான பொருட்கள்:
- ½ kg மட்டன்
- 100 g பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி-பூண்டு விழுது
- 2 tbsp கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- 30 ml எண்ணெய்
- உப்பு – தேவைக்கேற்ப.
- நறுக்கிய பெரிய வெங்காயம் – 50 கிராம்,
- 30 கிராம் தேங்காய்த்துருவல்
- 8 காய்ந்த மிளகாய்
- 2 ஸ்பூன் முழுமல்லி
- ½ ஸ்பூன் சீரகம்
- ½ கப் வெள்ளை எள்
- 2 ஸ்பூன் கசகசா
- 2 கிராம்பு
கோலாபுரி மட்டன் கறி செய்முறை:
மட்டன் நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடங்கள்ஊறவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து, ஆறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, பின்னர் ஊறவைத்திருக்கும் மட்டனைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்து, எண்ணெய் மசாலாவிலிருந்து பிரிந்து மேலே வரும்வரை வதக்கவும்.
பின்னர் பின்பு தேவையான அளவு வெந்நீர் சேர்த்து குழம்பை கொதிக்க விடவும். மட்டன் நன்றாக வெந்து குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான கோலாபுரி மட்டன் குழம்பு தயார்.
