நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு எடுத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார். நிர்வாகிகளை கேட்டறிந்த பின் கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அன்புமணி, காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் கொண்டுவரக் கூடாது என்ற பாமகவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று அன்புமணி கூறினார்.