சுவையான சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுறா மீன் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- 250 கிராம் சுறா மீன் துண்டு
- 1 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய்
- பூண்டு 6 பல்
- சிறிது மல்லித் தழை
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் முழு உளுந்து
- ½ ஸ்பூன் சீரகம்
- சிறிது கறிவேப்பிலை
- 2 எண்ணெய்
- சிறிது மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கு
சுறா மீன் புட்டு செய்முறை:
முதலில் சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.
மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம். மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
கடாயை சூடாக்கவும் அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
இப்போது சுவையான சுறா புட்டு தயார் நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.
