திரௌபதிக்கு எந்த ஒரு அறிமுகமும் புதிதாக தேவையில்லை. அவர் பாண்டவர் ஐவரின் மனைவியாக இருந்தார், மேலும் மகாபாரதப் போர் நடைபெறுவதற்கான முக்கிய காரணியாகவும் இருந்தார். ஆனால் மனித உடலின் ஐந்து சக்கரங்கள் பிணைப்பதைக் குறிக்கும் அறிகுறியாக திரௌபதி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் மனிதர்களின் முதுகெலும்பில் இருக்கும் குல குண்டலினியாகக் கருதப்படுகிறார். திரௌபதி பற்றி மேலும் சில மர்மமான தகவல்களை இங்கே பாருங்கள்…
திரௌபதியின் வேறு பெயர்கள்
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான திரௌபதி அவர்களுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. அவை பாஞ்சாலி (பாஞ்சாலம் நாட்டிலிருந்து வந்தவர் என்று பொருள்), யஜ்னசேனி (நெருப்பிலிருந்து பிறந்தவர் என்று பொருள்), மகாபாரத (பாரதத்தின் ஐந்து பாண்டவர்களின் சிறந்த மனைவி) மற்றும் சைரந்திரி (பணிப்பெண் நிபுணர், தன்னுடைய இரண்டாவது நாடுகடத்தலின் போது விராத நாட்டின் அரசி சுதேஷ்னாவின் கூந்தல் அலங்கார நிபுணராக பணிபுரிந்ததனால் ஏற்பட்ட பெயர்).
திரௌபதிக்கு ஐந்து பேருக்கு முன் 14 கணவர்கள்
திரௌபதி தனது முந்தைய பிறப்பில் 14 திறமையான குணங்களைக் கொண்ட கணவனைக் கேட்டதாக கதை உண்டு. அதற்கு சிவபெருமான் வரத்தை அளித்தார். ஆனால் அவ்வாறு 14 குணங்களையும் கொண்ட ஒருவர் உலகில் எங்குமே இல்லை. அதனால் ஐந்து சிறந்த தகுதிகளைக் கொண்ட ஒருவரை மணக்க சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வாறு தர்மம், வலிமை, வில்வித்தை திறன், நல்ல தோற்றம், பொறுமை என ஐந்து தகுதிகளைத் தனித்தனியாகக் கொண்ட ஐந்து ஆண்களைத் திருமணம் செய்து கொள்வாய் என வரமளித்தார். திரௌபதி அமைதியால் துன்பப்படுவதை விரும்புவதில்லை பண்டைய கால பண்பாட்டில் மிகவும் அரிதாக திரௌபதி பயமற்ற பெண்ணாக இருந்தார். அவர் அவமதிக்கப்பட்ட போது அஸ்தினாபுரத்து அரசனான திருதராட்டிரனிடம் நேரடியாக நீதி கேட்டார். மேலும் சைரந்திரியாக (பணிப்பெண்ணாக) இருக்கும் போது விராத் நாட்டு அரசனின் மைத்துனரால் அவமதிக்கப்பட்ட போது அந்த அரசரிடமும் நேரடியாக நீதி கேட்டார். பெண்ணைப் பாதுகாக்கத் தவறியதற்காக அந்த இரண்டு மன்னர்களையும் வெளிப்படையாக கண்டித்தார். தன் துகில் உரிக்கும் நிகழ்வின் போது தான் அவமானப்பட்டதிலிருந்துத் தன்னை காப்பாற்ற தவறியதற்காக பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியர் மற்றும் தன்னுடைய கணவர்களையும் அவர் கண்டித்தார்.
திரௌபதி குழந்தையாக பிறக்கவில்லை
பாஞ்சாலி தேசத்தின் மன்னர் துருபாதர் திரௌபதியைக் குருவின் குடும்பத்தை அழிப்பதற்காக உருவாக்கினார். துரோணர் தனது மாணவர்களான கௌரவர்களையும் பாண்டவர்களையும் பயன்படுத்தி பாஞ்சால தேசத்தைப் பிரித்தார். திரௌபதி ஒரு குழந்தையாகவோ பெற்றோரின் அரவணைப்பிலோ பிறந்து வளரவில்லை, வயதுவந்த பெண்ணாகவே உருவானார். திரௌபதி அழிக்கும் சக்தியாக வளர்க்கப்பட்டார்.
காளியின் அவதாரம்
தென்னிந்திய மக்களின் நம்பிக்கையின் படி திமிர் பிடித்த மன்னர்களை அழிக்கும் கிருஷ்ணருக்கு உதவி செய்யும் மகாகாளியின் அவதாரமாக திரௌபதி கருதப்படுகிறார். அதனாலேயே நெருப்பிலிருந்து திரௌபதி வந்தாலும் சகோதர சகோதிரியாக கருதப்படுகிறார்கள்.
திரௌபதி தனது கணவர்களை நம்பவில்லை
திரௌபதி தான் அடைந்த அவமானங்களுக்குப் பழிவாங்க வேண்டுமென முழங்குகிறார். ஆனால் தனக்கு நேர்ந்த அவமானத்திற்குத் தனது கணவர்கள் பழிவாங்குவார்களா என்று சந்தேகிக்கிறார். அவர்களை சந்தேகப் படுவதற்கும் அவருக்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
அவர்களுடைய தங்கையின் கணவரான ஜெயத்ரத்தனை கொல்ல மாட்டார்கள் என்று எண்ணினார். ஜெயத்ரத்தன் திரௌபதியை வீட்டிலிருந்து இழுத்து வந்து தேரில் கொண்டு சென்றவர். நாடுகடத்தப்பட்ட போது இவர்கள் புரிந்த வேடத்தைச் சொல்லி விடுவார் என்று கிச்சாக்கவை கொல்வதற்கும் தயங்குவார்கள். கிச்சாக்கா தான் நாடுகடத்தப்பட்ட இறுதி ஆண்டில் திரௌபதியை துஷ்பிரயோகம் செய்தவர்.
திரௌபதியின் பாத்திரம்
திரௌபதியின் பாத்திரத்தை லக்ஷ்மியின் “அக்ஷ்ய பாத்திரம்” போல இருந்தது, எப்போதும் உணவு நிறைந்து இருக்கும். இந்தியா முழுவதும் திரௌபதியின் பாத்திரம் என்றால் நல்ல உணவுகள் நிறைந்திருக்கும் மிகச்சிறந்த சமையலறை என்று பொருள். அத்தகைய சமையலறை ஒரு நல்ல முறையில் வீட்டை நிர்வாகம் செய்வதற்கு அடையாளம்.(சில சமயங்களில் திரௌபதி “அன்னபூரணா” என்று குறிப்பிடப்படுகிறார்). மகாபாரதமானது ஒரு நல்ல இல்லத்தரசியின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. பெண்ணானவள் வெறும் இச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவி அல்ல என்று நமக்கு காட்டுகிறது.
முனிவர் துர்வாசரால் திரௌபதி காப்பாற்றப்பட்டாரா?
திரௌபதியின் துகில் உரிக்கும் நிகழ்விலிருந்து முனிவர் துர்வாசர் அவரைக் காப்பாற்றினார் என்ற சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. திரௌபதியின் மீட்புக்கு முனிவரின் வரமே காரணம் என சிவ புராணம் குறிப்பிடுகிறது. ஒருமுறை கங்கையில் முனிவர் நீராடும் போது அவருடைய இடுப்பு துணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. உடனே திரௌபதி தன்னுடைய ஆடையிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து முனிவருக்கு வழங்கினார். எனவே முனிவர் அவருக்கு வரத்தை வழங்கினார். இந்த வரம் துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரிக்கும் போது நீண்ட துணியாக வந்து உடலை மூடி திரௌபதியைக் காப்பாற்றியது என்ற கதை ஒன்று உள்ளது.
திரௌபதியின் பல்வேறு அவதாரங்கள்
நாரத புராணம் மற்றும் வாயு புராணத்தின் கூற்றுப்படி, திரௌபதி என்பவர் ஷியாமலா (தர்மத்தின் மனைவி), பாரதி (வாயுவின் மனைவி), ஷாச்சி (இந்திரனின் மனைவி), உஷா (அஸ்வின் மனைவி) மற்றும் பார்வதி (சிவனின் மனைவி) ஆகியோரின் ஒன்றிணைந்த அவதாரமாவார். அவருடைய முந்தைய அவதாரங்களில், வேதாவதி என்ற பெயரில் பிறந்து இராவணனைச் சபித்தார். மேலும் இராவணனின் மரணத்திற்குக் காரணமான சீதையாகவும் அவதரித்தார். அவருடைய மூன்றாவது அவதாரத்தில் தமயந்தி அல்லது அவருடைய மகள் நலயாணியாக பிறந்தார். தன்னுடைய ஐந்தாவது அவதாரத்தில் திரௌபதியாக தோன்றினார்.
திரௌபதி நாய்களை சபித்தார்
ஒரு பஞ்சாபி நாட்டுப்புறக் கதையின்படி, ஐவரும் திரௌபதியை மணந்த பின்பு திரௌபதி ஒரு நிபந்தனை வைத்தார். பாண்டவர்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே திரௌபதியின் அறைக்குள் செல்ல வேண்டும். அந்த சமயம் பாண்டவர்களில் வேறு யாரும் உள்ளே நுழையக் கூடாது. அவ்வாறு உள்ளே வருபவர் தங்களுடைய காலணிகளை அறைக்கு வெளியே விட்டுவிட்டு வர வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் ஓராண்டிற்கு நாடுகடத்தப்பட்ட வேண்டும் என்று விதித்திருந்தார். பாண்டவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
ஒரு நாள் தர்மர் திரௌபதியின் அறையில் இருந்த போது ஒரு நாய் அறையின் வெளியில் இருந்த தருமரின் காலணிகளை எடுத்துக் கொண்டு சென்றது. காலணி இல்லாததால் தருமன் உள்ளே இருப்பதை அறியாமல் அர்ச்சுனன் திரௌபதியின் அறைக்குள் நுழைந்தார். அப்போது திரௌபதியும் பாண்டவர்களின் மூத்தவரான தருமரும் ஒன்றாக இருந்ததைப் பார்த்தார். இதனால் ஒப்பந்தத்தின் படி அர்ச்சுனன் நாடுகடத்தப்பட வேண்டும். இந்த தர்மசங்கடமான நிலையில் திரௌபதி அந்த காலணிகளைத் திருடிய நாயால் அனைத்து நாய்களையும் “உலகெங்கும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக இருப்பதை மற்றவர்கள் பார்க்கும்படி இருப்பீர்கள் அதனால் அவமானங்களையும் வெக்கத்தையும் அடைவீர்கள்” என்று கோபமாக சபித்தார்.
திரௌபதியின் மறுபக்கம்
துரோணரின் மகனான அசுவத்தாமன் போர் நடக்கும் ஒரு நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்து மகன்களையும் இரக்கமின்றி கொலை செய்தான். கிருஷ்ணர், அர்ச்சுனர் மற்றும் பீமன் ஆகியோர் சென்று அஸ்வத்தாமனைக் கைப்பற்றி இறுதி முடிவை எடுப்பதற்காக அவனைத் திரௌபதியிடம் அழைத்து வந்தனர். தன் காலடியில் கிடக்கும் அஸ்வத்தாமனைக் கண்டும் இரக்க உணர்வைத் தான் காட்டினார். தர்மத்தின் வழியில் நில்லாது நள்ளிரவில் துடிக்க துடிக்க கொலை செய்த இந்த கொலைகாரனைக் கொல்வதில் எந்த தவறும் இல்லை என்று கிருஷ்ணர் அறிவுறுத்தினார். இருந்தாலும் நான் மகன்களை இழந்து தவிப்பது போல் தானே இவனின் தாயும் துடிப்பார் என்று தாய்மை உணர்வைக் காட்டினார்.
கன்னித் தன்மையை உணர்த்தினார்
திரௌபதி ஒரு கணவரிடமிருந்து அடுத்த கணவரிடம் செல்வதற்கு முன் நெருப்பில் நடந்துத் தன்னுடைய கன்னித்தன்மையை நிரூபித்தார். இந்த நிபந்தனை ஏதும் பல மனைவிகளைக் கொண்ட கணவன்களுக்கு இருப்பதில்லை. இத்தனைக்கும் பாண்டவர்கள் ஐவருக்கும் வேறு மனைவிகள் இருந்தனர். அவர்கள் தங்களுடைய பெற்றோருடன் இருந்தனர். திரௌபதியுடன் ஒருவர் ஓராண்டு இருக்கவேண்டும். ஆகவே மற்றவர்கள் அதனைக் கணக்கிட்டு அந்த நான்கு ஆண்டுகளைத் தங்களுடைய இன்னொரு மனைவியுடன் கழிக்க நகரத்தை விட்டு வெளியேறுவார்கள்.
