மாதந்தோறும் இரு முறை பிரதோஷம் வருகிறது.
பிரதோஷ நாள் மகிமை
நெடுங்காலங்களுக்கு முன் சித்தர்கள் மட்டும் வழிபாடு செய்து வந்தனர். அதன் பின்னர் சித்தர்கள் வழியில், ஆன்மிக நெறியைப் பின்பற்றி வந்தவர்களும், அதன் பின்னர் மிகவும் பிரபலமான சில ஆன்மிக பிரியர்கள் செய்துவந்தனர். தற்போது பிரதோஷத்தின் அருமையும், பெருமையும் அறிந்ததால், அனைத்து மக்களும் பிரதோஷத்திற்காகச் சிவ ஆலயத்தை நோக்கி செல்கிறார்கள்.
நாம் பிரதோஷ தினத்தில் சிவ ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால், வாழ்வில் இருக்கும் அனைத்து பாவங்களும், தோஷங்களும் காணாமல் போகும்.
நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம், நாயகன் உரைக்கும் வார்த்தைகள் என்று என பெரியவர்கள் சொல்வார்கள்.
அனைத்து சிவன் கோயில்களிலும் சிவ பெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக இருக்கும்.
பிரதோஷத்தில் நந்தியை வணங்கும் பக்தர்கள் விரதமிருந்து மாலை நடக்கும் பிரதோஷ பூஜை முடிந்த பின்னர் உணவு அருந்துகின்றனர்.
பிரதோஷ நாள்:
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.20 மணி முதல் 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும்.
இறவா வரம் தரும் அமிர்தத்தைப் பெற வேண்டி வடவரை எனும் மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி எனும் நாகத்தைக் கயிறாகவும் திரித்து திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
இந்த நிகழ்வு குறித்து சிலப்பதிகார, ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் ‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பண்டொரு நாள் கடல் வயறு கலக்கினேயே’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வலி தாங்க முடியாமல் வாசுகி நாகம் விஷத்தை கக்கியதால் வெளியான ஆலகால விஷம் தேவர்கள், அரக்கர்களை நெருங்க அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்தவர்கள் சிவ பெருமானை சரணடைந்தனர்.
ஈசன், சக்தியுடன் நந்தி பகவானின் இரு கொண்டுகளின் நடுவே பிரன்னமாகி எங்கும் பரவிக் கிடந்த விஷத்தை உளுந்து அளவில் அடக்கி, அனைவரையும் காக்க அந்த ஆலகால விஷத்தை உண்டார்.
அதைக் கண்டு சிவ பெருமானுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என கலங்கிய பார்வதி தேவி, விஷத்தால் இறைவனுக்கு எதுவும் ஆகக் கூடாது என அவரின் கண்டத்தில் (கழுத்தில்) கை வைத்து அங்கேயே விஷத்தை நிலைத்திருக்க செய்தார்.
அதன் காரணத்தால் தான் சிவபெருமானுக்கு நீல கண்டன் என பெயர் வந்தது.
விஷத்தை உண்டு அனைவரையும் காப்பாற்றிய காலம் தான் பிரதோஷ காலம் என கூறுகிறோம். அந்த பிரதோஷ காலத்தில் சிவனையும், நந்தியையும் தரிசனம் செய்ய சர்வ பாவமும் விலகி நன்மை உண்டாகும். மகப்பேறு உண்டாகும் என நம்பப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் பிரதட்சணம் செய்யும் முறை:
பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சிவபெருமானை வணங்கும் முறையைப் பற்றி கடண்பவன புராணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பிரதோஷ தினத்தில் நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று சிவனை வணங்கி, இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். (உங்களுக்கு வலது புறம்). பின்னர் மீண்டும் சண்டிகேஸ்வர் உள்ள இடத்திலிருந்து வல சென்று கோமுகி எனப்படும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியே வரும் துவார வழியே தரிசனம் செய்து, அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் அதே போல் மீண்டும் கோமுகிக்கு சென்றூ தரிசனம் செய்து பின் சண்டிகேஸ்வரர் உள்ள சன்னதிக்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் இதே போல் செய்ய வேண்டும்.
கடைசியில் நந்தியை தரிசனம் செய்த பின்னர் சிவ பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
சோமசூத்திர பிரதட்சணம்
இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவதற்கு ‘சோமசூத்திர பிரதட்சணம்’ என்று பெயர். சோம சூத்திர பிரதட்சணம் செய்து வழிபட்ட பின்னர் தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொண்டு, ‘ஆத்ம பிரதட்சணம்’ செய்ய வேண்டும். இப்படி பிரதோஷ தினத்தில் பரிதட்சணம் செய்து வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கி நற்பலன்கள் அடைப்பெறுவோம்.
நந்தி காயத்ரி மந்திரம்
நந்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்
பொது பொருள்:
பரம புருஷனாகிய நந்தி பெருமானே. உங்களை தினமும் வணங்குவதன் மூலம் என்னை காத்து, எனது மனதை தூய்மைப் படுத்த வேண்டுகின்றேன்.
