வழிகள்
பப்பாளி
பசுந்தயிர்
பாதாம்
தேங்காய் விழுது
வெள்ளரி ஓட்ஸ் பேக்
பப்பாளி
பப்பாளி பழம் சருமத்தின் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்கவைக்ககூடியது. இந்த கோடையில் இதை நீங்கள் முதலாவதாக முயற்சி செய்யலாம். இது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி சரும சுருக்கங்களையும் தடுக்க உதவுகிறது. நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை கூழ் போல் மசித்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பேஸ்ட் போல் தடவுங்கள். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவினால் முகத்தின் வறட்சி படிப்படியாக நீங்கும். தேனுக்கு பதிலாக பாலும் கலந்து பயன்படுத்தலாம்.
பசுந்தயிர்
கெட்டியான பசுந்தயிர் முகம் இழந்த நிறத்தை மீட்கவும் பளிச்சென்று வைக்கவும் உதவும். குறிப்பாக இயற்கையான ஃப்ளீச் என்று சொல்லுமளவுக்கு தயிர் செயல்படுகிறது. தயிருடன் மேலும் சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்க தேன் சேர்க்கலாம்.
மூன்று டீஸ்பூன் தயிருக்கு இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து நன்றாக குழைத்து முகத்திலும் கழுத்திலும் தடவி இலேசாக மசாஜ் செய்தால் போதுமானது. 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும்.
பாதாம்
இது விலை உயர்ந்த பேக் போன்று இருந்தாலும் கூட சருமத்துக்கு இயற்கையாகவே எண்ணெய் பசையை கொடுக்ககூடியது. பாதாமில் இருக்கும் வைட்டமின் இ முகத்தின் வறட்சியை தடுக்ககூடியது.
முன் தினம் இரவு 8 பாதாமை ஊறவைத்து மறுநாள் தோலை நீக்கி பன்னீர் சேர்த்து அரைக்கவும். இதை முகத்திலும் கழுத்திலும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவை வறட்சியோடு முகத்தின் நிறத்தையும் மேன்மைபடுத்தும்.பாதாமுக்கு மாற்றாக பாதாம் எண்ணெயையும் வைட்டமின் இ ஆயிலையும் கலந்தும் முகத்துக்கு மசாஜ் செய்யலாம்.
தேங்காய் விழுது
வறண்ட சருமத்துக்கு தேங்காய் சிறந்த பலன் தரும். அரை கப் தேங்காய்த்துருவலை எடுத்து மிக்ஸியில் மைய அரைத்து (நீர் விடாமல்) முகத்தில் தடவி வட்ட வடிவில் இலேசாக மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் மசாஜ் செய்து பாலேடை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.
வெள்ளரி ஓட்ஸ் பேக்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்கது. இவை சருமத்துக்கும் நீர்ப்பதத்தை அளிக்கும். வெள்ளரிக்காய் சாறுடன் ஓட்ஸ் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கற்றாழை சாறு சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முக வறட்சியோடு இறந்த செல்களையும் நீக்கி முகத்தை பொலிவாக வைக்கும். பிறகு மாய்சுரைசர் தடவவும்.
கோடையில் அதிகப்படியான வறட்சியை தடுக்க கொடுத்திருக்கும் இந்த பொருள்களை பயன்படுத்தினாலே சருமம் மேலும் வறட்சிக்குள்ளாகாமல் தடுக்க முடியும். உங்கள் சருமம் வறட்சியாக இருந்தால் அவை மேலும் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க தினம் ஒரு 10 நிமிடங்கள் செலவழித்தால் போதுமானது.
