இந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து  சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.
இந்த பச்சடி இனிப்பு ,துவர்ப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருள்கள்
நார்த்தங்காய் – 2
வெல்லம் – 100  கிராம்
பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 4
புளி  – 1 நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 சின்ன குழிகரண்டி அளவு
கருவேப்பிலை கடுகு வெந்தயம் – தாளிக்க
மல்லிதூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – 5 தேக்கரண்டி

செய்முறை

நார்த்தங்காயை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கர்  வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு பின்பு பச்சை மிளகாய், இஞ்சி போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின் வெட்டி வைத்துள்ள காயை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதனுடன் அனைத்து துாள்கள்  மற்றும்   தேவையான அளவு உப்பு சேர்த்து  5 நிமிடம் வதக்கி அதனுடன் புளித்தண்ணீர்  சேர்த்து கொதிக்க வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

பின்பு வெல்லத்தை பொடித்து   போட்டு  20  நிமிடம் நன்றாக கொதித்து கெட்டியானபின் இறக்கவும்.

சுவையான நார்த்தங்காய் பச்சடி பச்சடி ரெடி.

ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்கும்.